நல்லம்பள்ளி, டிச.10: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள தண்டுகாரம்பட்டியில் கிராமத்தில் உள்ள பிரசன்னவெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து, நேற்று முதலாமாண்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி, தண்டுகாரம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர், மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து ராஜா அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். மேலும், திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
The post பெருமாள் கோயிலில் முதலாமாண்டு விழா appeared first on Dinakaran.