பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

3 weeks ago 6

 

தர்மபுரி ஜன.12: தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில், நித்ய கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில், 6ம் ஆண்டு சொர்க்கவாச திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக, காலை 10 மணியளவில், சீர்வரிசை அழைப்பு, மாரியம்மன் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் புடவை, வளையல், பழம், பூக்கள் ஆகியவற்றை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். கோயில் வளாகத்தில் காலை 11 மணி அளவில் சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. விழாஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் appeared first on Dinakaran.

Read Entire Article