சென்னை: பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த 6 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம், காலில் அடிபட்ட காயத்துக்காக 6 வயது சிறுமி பாவனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிறுமி பாவனா உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.