சென்னை: பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ரூ.213 கோடியில் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை பிப்.28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக சிஎம்டிஏ நிதியில் இருந்து ரூ.84.17 கோடி நிதியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று வழங்கினர்.