மன்னார்குடி, ஜன.17: மன்னார்குடியில் பொங்கல் விழாவில் பெரியார் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக கவிஞர் அறிவுமதி கூறினார். மன்னார்குடியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரைப்பட பாடலாசிரி யரும், கவிஞருமான பாவலர் அறிவு மதி கலந்து கொண்டார். இந்த விழா வில், தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பி வரும் சீமானுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்து அவர் பேசிய பேச்சு பெரும் பேசு பொருளாகி விட்டது. மன்னார்குடி மந்தக்காரத் தெருவில் உள்ள திருவள்ளுவர் நூலக வாசகர் வட்ட 50ம் ஆண்டு விழா, பொங்கல் மற்றும் விளையாட்டு விழா என முப் பெரும் விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. கோவி மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட தொழில் கூட்டுறவு அலுவலர் கெள தமன், முன்னாள் நகர் மன்ற உறுப் பினர் கார்த்திகேயன், நகர் மன்ற உறுப்பினர் புகழேந்தி முன்னிலை வகித்தனர். முன்னதாக குருநாதன் வரவேற்றார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை தலைவர் காமராசு, முன்னோடி விவசாயி சேரன்குளம் செந்தில்குமார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிபிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திரைப்பட பாடல் ஆசிரி யர், பாவலர் அறிவுமதி பேசுகையில், நூல்களையும், நூலகங்களையும் பயன் படுத்தியவர்கள் தான் இன்று பல்வேறு துறைகளில் உச்சத்தில் உள்ளனர். நூலகங்கள்தான் சாதனையாளர்களை உருவாக்கும் களமாக உள்ளது. தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது மாநிலத்தில் 1330 ஊராட்சிகளில் திருவள்ளுவர் நூலகம் அமைக்க வேண்டுமென நான் கோரிக்கை மனு அளித் தேன். அதனை ஏற்ற தலைவர் கலைஞர் மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அய்யன் வள்ளுவன் நூலகத்தை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். பெரியாரிய உழைப்பும், மார்க்சீய உழைப்பும் தான் தமிழ்நாட்டில் கைநாட்டு களை, கையெழுத்துகளாக மாற்றி உள்ளது. கொள்கை ரீதியாக ஆயிரம் விமர் சனங்கள் இருக்கலாம், ஆயிரம் கோபங்கள் இருக்கலாம். ஆனால்.பெரியாரை விமர்சிக்கும் தகுதி, அறிவும், ஆற்றலும், ஒழுக்கமும் தமிழ்நாட்டில் எந்த ஒரு கொம்பனுக்கும் இல்லை. பெரியார் குறித்து விமர்சிக்க எவன் வந்தாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார். முடிவில், பொன்முடி நன்றி கூறினார்.
The post பெரியார் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன்: கவிஞர் அறிவுமதி appeared first on Dinakaran.