பெரியாரின் மண்ணில் திமுக பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை 2026ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்க செய்வோம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி

3 months ago 8

சென்னை: பெரியாரின் மண்ணில் திமுக பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை, 2026ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசின் மீதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்த்தி இருக்கிறது.

ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் பயனளிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வரும் நமது முதல்வரின் ஓய்வில்லா உழைப்புக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அளித்திருக்கும் ஊக்கமே இந்த வெற்றி! களத்திற்கு வரும் முன்னே முடிவினை உணர்ந்து, ஒதுங்கி ஓடிய பாசிஸ்ட்டுகளும்-அடிமைகளும் இனிமேலாவது பொய் ப் பிரசாரத்தையும் அவதூறு அரசியலையும் கைவிடுவது நல்லது.

ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்றிருக்கும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கும், வெற்றிக்காக உழைத்த திமுகவினர்-தோழமை இயக்கத்தினருக்கும் வாழ்த்துகள். தொகுதியின் வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த நன்றி. தாழ்ந்து கிடந்த தமிழினத்தை சுயமரியாதை உணர்வூட்டி தட்டி எழுப்பிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் மண்ணில் திமுக பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை, 2026ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post பெரியாரின் மண்ணில் திமுக பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை 2026ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்க செய்வோம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article