சென்னை: நாம் எந்தத் துறையில், எந்த நிலையில் இருந்தாலும் தங்கராசு பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் வழியில், பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி கேட்டுக் கொண்டார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு கே.தங்கராசு புகைப்படத்தை திறந்துவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: