‘பெரிய அளவில் பாதிப்பு இல்லை’ - தென் மாவட்ட மழை குறித்த ஆலோசனைக்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

5 months ago 16

சென்னை: “தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை. எது வந்தாலும், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், “தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. அதுதொடர்பாக, ஏற்கெனவே மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி, அதை மேற்பார்வையிடுவதற்காக, சென்னையில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். அதுதொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Read Entire Article