பெரம்பலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் பொது மக்கள் குறைதீர் முகாம்

2 weeks ago 1

பெரம்பலூர்,ஜன.22: பெரம்பலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 25ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் கிரேஸ் பச்சாவ் செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம், பெரம்பலூர் தாலுக்கா, நொச்சியம் கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன் தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுக்கா, வி.களத்தூர் கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் வாசுதேவன் தலைமையிலும், குன்னம் தாலுக்கா,

எழுமூர்(கிழக்கு) கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெய தலைமையிலும், ஆலத்தூர் தாலுக்கா, சாத்தனூர் கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலும் வருகிற 25 ஆம்தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறஉள்ளது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்டக் கலெக்டர் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் பொது மக்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article