பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயிலில் பெருமாளுக்கு கல்கிரீடம் கொண்டை அலங்காரம்

4 months ago 12

 

பெரம்பலூர்,ஜன.6: பெரம்பலூர்  மதன கோபால சுவாமி திருக்கோவிலில், பெருமாள் கல்கிரீடம் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பெரம்பலூரில் நகராட்சி தெப்பக்குளம் அருகே உள்ள  மரகதவல்லித் தாயார் சமேத  மதன கோபால சுவாமி திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் பகல் பத்து, 6ம் நாளான நேற்று(05ஆம்தேதி) மாலை 5:30 மணியளவில், பெருமாள் கல் கிரீடம் கொண்டைஅலங்காரத் தில் எழுந்தருளி பக்தர்க ளுக்கு சேவைசாதித்தார். நிகழ்ச்சிகளில் கோவில் செயல்அலுவலர் கோவிந் தராஜன், முன்னாள் அறங் காவலர் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், கோவிந்தராஜன் மற்றும் பெரம்பலூர் அரணாரை, எளம்ப லூர், விளாமுத்தூர், நெடு வாசல் உள்ளிட்ட சுற்று வட்டாரபகுதிகளை சேர்ந்த திரளான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெற்றனர்.
பூஜைகளை பட்டாபி பட்டாச் சாரியார் செய்துவைத்தார்.

The post பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயிலில் பெருமாளுக்கு கல்கிரீடம் கொண்டை அலங்காரம் appeared first on Dinakaran.

Read Entire Article