பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாநில அடைவு ஆய்வுக்கான பயிற்சி

2 hours ago 1

 

பெரம்பலூர்,பிப்.1: குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாநில அடைவு ஆய்வுக்கான பயிற்சி நடைபெற்றது. பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக, வருகிற 4, 5, 6 ஆகியத் தேதிகளில் 3, 5, 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மாநில அடைவு ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வினை நடத்துவதற்கு கள ஆய்வாளர்களாக குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பணியாற்ற உள்ளனர்.

இதனையொட்டி நேற்று நடத்தப்பட்ட கள ஆய்வாளர்களுக்கான பயிற்சியில் கல்லூரி மாணவர்கள் 111 பேர் கலந்துகொண்டனர். இந்த பயிற்சிக்கு பெரம்பலூர் அரசு கலைஅறிவியல் கல்லூரியின் முதல்வர் ரேவதி தலைமை வகித்து பயிற்சியினை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியின் போது, மேற்கொள்ள வேண்டிய முக்கிய கருத்துகளை கல்லூரி பேராசிரியர் குமணன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் வரதராஜ், மாநில கருத்தாளர் வேலுசாமி, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் பார்த் திபன், விஜயலட்சுமி, திலகம், உமாதேவி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் பயிற்சியானது, பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் மூலமாக நடத்தப்பட்டது.

The post பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாநில அடைவு ஆய்வுக்கான பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article