டங்ஸ்டன் | யார் குழந்தை பெற்றாலும் நாங்களே இனிஷியல் போடுவோம் என்பதா? - திமுகவை சாடும் பாஜக!

2 hours ago 1

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்தானதற்கு திமுக, பாஜக, அதிமுக என போட்டிபோட்டு பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்​துக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்​பியதை அடுத்து, சட்டமன்​றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், “நான் முதல்வராக இருக்கும் வரை இந்தத் திட்டத்தை வரவிட​மாட்​டேன்” என அறிவித்​தார். அதிமுக-வும் இந்தத் திட்டத்​துக்கு எதிராக பேரவையில் குரல் கொடுத்தது. களத்துக்கு வந்து மக்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணா​மலை​யும், “டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக நல்ல முடிவை மத்திய அரசு அறிவிக்​கும்” என, உறுதி​யளித்​தார்.

இந்நிலையில் ஜனவரி 21-ம் தேதி, அண்ணாமலை மற்றும் மாநில பாஜக பொதுச்​ செய​லாளர் இராம.சீனி​வாசன் தலைமையிலான பாஜக-​வினர் விவசா​யிகளை டெல்லிக்கே அழைத்துச் சென்று மத்திய சுரங்​கத்துறை அமைச்சர் கிசன் ரெட்டியை சந்தித்​தனர். இந்தச் சந்திப்​புக்குப் பிறகே திட்டம் கைவிடப்​படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

Read Entire Article