பெயின்டரிடம் வழிப்பறி 3 ரவுடிகள் சிக்கினர்

2 months ago 9

பெரம்பூர்: கன்னிகாபுரம் தாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (31), பெயின்டர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து புளியந்தோப்பு கன்னிகாபுரம் கஸ்தூரிபாய் காலனி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் இவரை வழிமறித்து குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். தினேஷ் பணம் இல்லை என கூறவே சரமாரியாக அவரை தாக்கி விட்டு 500 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி புளியந்தோப்பு கஸ்தூரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கின்ற பிள்ளை கார்த்திக் (320, வினோத் (32), சூர்யா (23) என மூன்று பேரையும் கைது செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

The post பெயின்டரிடம் வழிப்பறி 3 ரவுடிகள் சிக்கினர் appeared first on Dinakaran.

Read Entire Article