சென்னை: “பென்னாகரத்தில் புளியை பதப்படுத்த 10 தொழில்முனைவோருக்கு ரூ.2.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக” சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி பேசும்போது, “பென்னாகரம் தொகுதியில் புளி ஏராளமாக சாகுபடி செய்யப்படுவதால் அதனை பதப்படுத்த அரசு மானியத்துடன் கடன் வழங்குமா? இப்பகுதியில் விளையும் புளிக்கு அரசு புவிசார் குறியீடு பெற்று தருமா?” என கேள்வி எழுப்பினார்.