‘பென்சில்’ பிரச்சினையில் சக மாணவருக்கு அரிவாள் வெட்டு - நெல்லை துணை ஆணையர் விளக்கம்

2 days ago 6

திருநெல்வேலி: “பென்சில் தொடர்பாக இரு மாணவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினையே, அரிவாள் வெட்டு சம்பவத்துக்கு காரணம்,” என்று நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் விளக்கம் அளித்துள்ளார்.

பாளையங்கோட்டை தனியார் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவரை, சக மாணவர் அரிவாளால் வெட்டினார். இதைத் தடுத்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த, நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் கூறியதவாது: “பென்சில் தொடர்பாக இரு மாணவர்களிடம் ஏற்பட்ட பிரச்சினையே இதற்குக் காரணம். காயமடைந்த மாணவர் மற்றும் ஆசிரியைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read Entire Article