பெண்ணை தாக்கியவர் கைது

4 months ago 14

சேலம், ஜன.10: சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(39). கூலித்தொழிலாளி. இவர் மீது அதே பகுதியை சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர் கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேசனில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், மாரிமுத்து தவறான எண்ணத்தில் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்தார். செல்போன் வாட்ஸ்அப்பில் தவறான செய்திகளை அனுப்பி வந்தார். தன்னிடம் பேசுமாறு கட்டாயப்படுத்தினார். கடந்த 8ம்தேதி வீட்டிற்கு வந்த அவர் வாக்குவாதம் செய்ததுடன் என்னை தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.

The post பெண்ணை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article