நாமகிரிப்பேட்டை, பிப்.1: நாமகிரிப்பேட்டை அருகே போதையில் பெண்ணை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் குபேந்திரன்(45). லாரி டிரைவரான இவர், நேற்று குடிபோதையில் அங்குள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கு பணியாற்றி வரும் அதே பகுதியைச் சேயர்ந்த இளையப்பன் மனைவி கோகிலா(40) தகராறு செய்துள்ளார். மேலும், தகாத வார்த்தையில் பேசி தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து குபேந்திரனை கைது செய்தனர்.
The post பெண்ணை தாக்கிய டிரைவர் கைது appeared first on Dinakaran.