பெண்ணை கண்ணிய குறைவாக நடத்திய காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் நடவடிக்கை

3 days ago 2

சென்னை: காவல் நிலையம் வந்த பெண்ணை கண்ணிய குறைவாக நடத்திய காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் நிலப்பிரச்சினை தொடர்பாக தனது தந்தை மற்றும் சகோதரனுக்கு எதிராக அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல், புகார் முடித்து வைக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு சென்றார். அப்போது அந்த காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி, பிரியதர்ஷினியை கண்ணிய குறைவாக நடத்தியதாகவும், அவமரியாதை செய்ததாகவும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில், பிரியதர்ஷினி புகார் மனு தாக்கல் செய்தார்.

Read Entire Article