புவனகிரி, நவ. 17: புதுச்சத்திரம் அருகே தீர்த்தனகிரி கிராமத்தை சேர்ந்தவர் அருண்(20). இவர் அதே கிராமத்தை சேர்ந்த அனிதா என்ற பெண்ணை காதலித்து உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு சென்றனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை சொந்த ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து அருணும், அனிதாவும் புதுச்சத்திரம் வந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் காரை வழிமறித்த அனிதாவின் உறவினர்கள் சக்திவேல், ராஜகுமாரி, திலகராஜ், பரசுராமன், விஜய் ஆகிய 5 பேரும் அசிங்கமாக திட்டி, அடித்து அனிதாவை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருண் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெண்ணை கடத்தியதாக 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.