மதுரை: “தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி வந்தால் தமிழகத்தில் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக் கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள்” என்று திமுக பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதன் முக்கிய அம்சங்கள்