பெண்ணிடம் அத்துமீறல் புரோட்டா மாஸ்டர் கைது

9 hours ago 3

 

திருப்பூர், ஏப்.28: கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் 25 வயது பெண். இவர் காலேஜ் ரோட்டில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார்.அதே ஓட்டல் கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்பவர் குணா(29). நேற்று முன்தினம் குணாவின் செல்போன் மாயமானது.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குணாவிற்கு செல்போன் திருடியது குறித்து அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் செல்போன் திருடினாரா என சோதனை செய்ய, அந்தப் பெண்ணின் ஆடைகளை களைந்து சோதனை செய்தார். இதுகுறித்து அந்த பெண் கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குணாவை கைது செய்தனர்.

The post பெண்ணிடம் அத்துமீறல் புரோட்டா மாஸ்டர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article