வல்லம், நவ. 6: தஞ்சை அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை அறுத்துச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை அருகே அற்புதாபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அமுதராணி (42). கூலித் தொழிலாளி. இவர், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக அமுதராணி வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று 4ம் தேதி அதிகாலை அமுதராணியின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், தூங்கிக் கொண்டிருந்த அமுதாராணியின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அமுதராணி அலறி கூச்சல் போட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் செயினுடன் தப்பிவிட்டார். புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலிபறிப்பு appeared first on Dinakaran.