பெண்கள் விடுதி முன்பு நிர்வாணமாக நடனமாடிய வாலிபர் கைது

1 day ago 2

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் ஒரு மகளிர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு ஒரு வாலிபர் அந்த விடுதி முன்பு நிர்வாணமாக நின்று கொண்டு ஆபாச செய்கையில் ஈடுபட்டு நடனமாடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விடுதி நிர்வாகி தம்பானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதைத் தொடா்ந்து போலீசார் விசாரணை நடத்தியதோடு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் நிர்வாணமாக நடனமாடிய காட்சி பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அந்த நபர் திருவனந்தபுரம் ஒற்றசேகரமங்கலம் பகுதியை சேர்ந்த வினோத் (வயது 35) என்பதும், மதுபோதையில் ஆட்டம் போட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வினோத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Read Entire Article