பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனி இணையதளத்தை அரசு உருவாக்க வேண்டும்: நடிகர் விஜய் கோரிக்கை

5 months ago 14

சென்னை: தமிழக அரசு தனி இணையதளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நடிகர் விஜய், தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம் முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது.

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையதளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனி இணையதளத்தை அரசு உருவாக்க வேண்டும்: நடிகர் விஜய் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article