சென்னை: தமிழகத்தில் பெண்களின் ஆதரவோடு 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக மகளிரணி சார்பில், சர்வதேச மகளிர் தின விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியை, மகளிரணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில், பூரண கும்ப மரியாதை வழங்கி, அந்த சாலை முழுவதும் மகளிர் வரிசையாக நின்று மலர்தூவி வரவேற்றனர்.