பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வந்த பெண் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் கோயில் காவலாளி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவலாளிகள், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், தனியார் நிறுவனம் மூலம் பழநி ஆண்டவர் பூங்கா ரோடு பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் (27) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு மலைக்கோயிலில் மின் இழுவை ரயிலில் (வின்ச்) டிக்கெட் வழங்கும் பணியில் இருந்துள்ளார். அப்போது, அவருக்கும், பழநி கணபதி நகரை சேர்ந்த வழக்கறிஞர் பிரேமலதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.