திருச்சி: மதிமுகவுக்கு இத்தனை தொகுதிகள்தான் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. தேர்தல் நேரத்தில்தான் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திருச்சியில் செப். 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளோம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, என்னை தனது சுவீகார புத்திரன் என்றார். அப்போது நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்தாலும், எங்களது கொள்கைகளை என்றும் விட்டுக்கொடுத்தது இல்லை.