பெண் கேட்டு தராததால் 15 வயது சிறுமி கடத்தல்

7 months ago 20

கிருஷ்ணகிரி, நவ.14: கிருஷ்ணகிரி ஜேஏ நகர் தர்கா பகுதியை சேர்ந்த 15வயது சிறுமி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள மெட்பெண்டா பகுதியை சேர்ந்த திருப்பதி மகன் கார்த்திக் (21), கூலி தொழிலாளி. இவர் சிறுமியின் வீட்டுக்கு சென்று, அவரை திருமணம் செய்து கொள்வதற்காக பெண் கேட்டுள்ளார். ஆனால் சிறுமியின் பெற்றோர், தங்களது மகள் படித்துக்கொண்டிருக்கிறாள். இதனால் பெண் கொடுக்க முடியாது என கூறி மறுத்து விட்டனர். இதனிடையே, நேற்று முன்தினம் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள். அப்போது அங்கு வந்த கார்த்திக், அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் கேட்டு தராததால் 15 வயது சிறுமி கடத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article