சென்னை: பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறையில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தவர் மகேஷ் குமார். தமிழக அரசு நடத்தும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி.யாக பணியில் சேர்ந்தவர். பின்னர், ஐபிஎஸ் ஆக அந்தஸ்து பெற்றார். இவர் மீது போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்கள் 2 பேர் டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் அடுத்தடுத்து புகார் அளித்தனர்.