பெண் காவலரிடம் அத்துமீறல் எதிரொலி: சென்னை மின்சார ரயில் வழித்தடங்களில் இரவுநேர போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

2 months ago 12

சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் தங்க செயின் பறித்து, அவரிடம் அத்துமீறப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை மின்சார ரயில் வழித்தடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அனைத்து நடைமேடைகளிலும் இரவு 10 மணி முதல் 12 மணி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 25 மதிக்கத்தக்க பெண், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவரிடம் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கடந்த 15-ம் தேதி இரவு குடிபோதையில் தங்க செயின் பறிப்பில் ஈடுபட்டு அத்துமீறிய சத்தியபாலு என்பவரை மாம்பலம் ரயில்வே போலீஸார் கைது செய்து 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து, சிறையில் அடைத்தனர்.

Read Entire Article