கரூர், பிப். 22: : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சாலைப்புதூர் அருகே பெட்டிக்கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் வீட்டின் பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சாலைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மேரிகிரேஸ் (61). இவர், இந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த 20ம்தேதி பெட்டிக்கடைக்கு வந்த 25 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத வாலிபர் மூதாட்டியிடம் ஜூஸ் கேட்டார். கடையை திறந்து எடுத்துக் கொடுக்க சென்ற வேலையில் தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்று விட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் அந்த பகுதி சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டு வாலிபரை தேடுகின்றனர்.
The post பெட்டிக்கடையில் புகுந்து 5 பவுன் திருட்டு வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.