பெங்​களூரு சுயேச்சை வேட்​பாளர் மனு நள்ளிர​வில் தள்ளுபடி: ஈரோடு கிழக்​கில் 46 வேட்​பாளர்கள் போட்டி

2 weeks ago 1

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகு​தி​யில் போட்​டியிட மனு தாக்கல் செய்திருந்த பெங்​களூரு​வைச் சேர்ந்த சுயேச்சை வேட்​பாளர் பத்மாவ​தி​யின் வேட்​புமனு நேற்று முன் தினம்நள்ளிரவு தள்ளுபடி செய்​யப்​பட்​டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்​தில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் எண்ணிக்கை 46-ஆக குறைந்​துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்​குப்​ப​திவு பிப்.5-ம் தேதி நடைபெற உள்ள நிலை​யில், 58 வேட்​பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்​தனர். 3 மனுக்கள் தள்ளுபடி செய்​யப்​பட்டன. 8 வேட்​பாளர்கள் மனுக்​களைத் திரும்பப் பெற்​றனர். இதையடுத்து, திமுக, நாம் தமிழர் கட்சி வேட்​பாளர்கள் உள்பட 47 பேர் போட்​டியிட உள்ளதாக தேர்தல் நடத்​தும் அலுவலர் மணீஷ் நேற்று முன் தினம் மாலை தெரி​வித்​தார்.

Read Entire Article