புதுடெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் ராம்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் ஆஜராகி, கடத்தப்பட்ட சிறுவன் மனுதாரரின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்படவில்லை என்றும், இந்த கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகக்கூறி மனுதாரர் மீது உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வாதிட்டனர்.