கரூர்: குளித்தலையில் கோவில் பூச்சொரிதல் விழாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார். மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா ஊர்வலத்தின்போது ஓரமாக சென்று நடனம் ஆடுமாறு சொன்ன சிறுவன் ஷியாம் சுந்தரை நாகேந்திரன் என்பவர் கத்தியால் குத்தினார். தடுக்க வந்த அஜய், வசந்தகுமார் ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. சிறுவனை கொலை செய்துவிட்டு தலைமறைவான குற்றவாளிகளை 2 தனிப்படைகள் வலை வீசி தேடி வருகின்றன.
The post பூச்சொரிதல் விழாவின்போது சிறுவன் கொலை appeared first on Dinakaran.