புளியங்குடி பவானி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை

6 months ago 18

புளியங்குடி,நவ.17: புளியங்குடி முப்பெரும் தேவியர் கோயிலில் அருள் பாலித்து வரும் பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னியம்மன், நாகம்மன் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவுர்ணமி சிறப்பு அருள் வாக்கு குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மஞ்சள், தயிர் இளநீர், திருநீறு, சந்தனம், குங்குமம், தேன் உள்பட 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி ரத்தக்காளி, பவானி பத்ரகாளியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி, மகாகாளி, பேச்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணியளவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post புளியங்குடி பவானி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Read Entire Article