கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் தரையிறக்கப்பட்டது. கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இரவு இண்டிகோ விமானம் 8.15 மணிக்கு புறப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கோவை திரும்பியது.
அதில் இருந்த எரிபொருளை எரிப்பதற்காக கோவை வான்வெளியில் ஒரு மணி நேரம் சுற்றிய பின்னர் அந்த விமானம் பத்திரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் கோவையில் இருந்து ஐதராபாத் செல்ல இருந்த விமானத்தில் பயணிகளை ஏற்றி சிங்கப்பூர் அனுப்பி வைத்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமானதால் சிங்கப்பூருக்கு செல்கின்ற விமான பயணிகள் அவதி அடைந்தனர்.
The post புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு: கோவையில் அவசரமாக தரை இறங்கிய விமானம் appeared first on Dinakaran.