புறப்பட தயாரான விமானத்தில் திடீர் தீ விபத்து; உயிர் தப்பிய 294 பயணிகள்

2 months ago 10

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஒர்லேண்டோ நகரில் இருந்து ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகருக்கு நேற்று காலை டெல்டா விமானம் புறப்பட தயாரானது.

அந்த விமானத்தில் 294 பயணிகள் இருந்தனர். ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தின் எஞ்சினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதை அறிந்த விமானி உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர், அவசர கால வழி திறக்கப்பட்டு விமானத்தில் இருந்து பயணிகள் உள்பட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால், 294 பயணிகளும் உயிர் தப்பினர் . பின்னர் மாற்று விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Read Entire Article