நெல்லை, ஜன. 17: சங்கரன்கோவில் காயிதே மில்லத் 1ம் தெருவை சேர்ந்தவர் ஷேக் மைதீன் (33). புரோட்டா மாஸ்டர். ஷேக் மைதீன் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஷேக் மைதீன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் புரோட்டா மாஸ்டர் ஷேக் மைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post புரோட்டா மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.