புன்னன்சத்திரம் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

2 months ago 10

 

வேலாயுதம்பாளையம், நவ.6: கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்து வந்தனர்.

கடைக்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் ,பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் சின்ன ரெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் (52 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்

The post புன்னன்சத்திரம் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article