புதுமாப்பிள்ளை ரயிலில் சிக்கி பலி குடியாத்தம் அருகே சோகம் காதல் திருமணமான 5 மாதத்தில்

2 months ago 10

ஜோலார்பேட்டை, நவ.14: குடியாத்தம் அருகே காதல் திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை ரயிலில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமால். இவரது மகன் விஜய் செல்வம்(22). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பை மீறி 21 வயது இளம்பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு ஏடிஎம்மில் பணம் எடுத்து வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்ற விஜய் செல்வம், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் தேட தொடங்கினர். அப்போது குடியாத்தம்- காவனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏதோ ஒரு ரயிலில் சிக்கி உடல் சிதறி பலியாகி கிடப்பதை அறிந்து கதறி அழுதனர்.

தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று விஜய் செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தனி குடித்தனம் செல்வது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த விஜய் செல்வம் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது சிக்கி உயிரிழந்தாரா? என போலீசார் விசாரிக்கின்றனர். காதல் திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை ரயிலில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post புதுமாப்பிள்ளை ரயிலில் சிக்கி பலி குடியாத்தம் அருகே சோகம் காதல் திருமணமான 5 மாதத்தில் appeared first on Dinakaran.

Read Entire Article