கந்தர்வகோட்டை,மார்ச் 5: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஆண்டு பயின்று முடித்த மாணவ,மாணவிகள் 37 பேருக்கு பட்டய சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெயபால் தலைமைவகித்தார். திருத்துறைப்பூண்டி,கொருக்கை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ,மாணவிகளுக்கு பட்டய சான்றிதழ் வழங்கினார். பட்டம் வழங்கும் விழாவில் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post புதுப்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.