புதுச்சேரியில் மே 20-ல் பந்த்: ஏஐடியூசி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

13 hours ago 2

புதுச்சேரி: புதுச்சேரியில் இம்மாதம் 20-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என ஏஐடியூசி தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தொழிலாளர்கள் சார்பாக தனித்தும், கூட்டாகவும் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி தேசிய பேரவை விவாதித்தது. இதையடுத்து நாடு தழுவிய அளவில் வரும் 20-ம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது.

Read Entire Article