திருவனந்தபுரம்: விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கி கண்டெய்னர்களை ஏற்றி வந்த கப்பல் கடலில் மூழ்கியது. 25 பேர் கப்பலில் இருந்த நிலையில் 9 பேர் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் கடலில் குதித்துள்ளனர். மேலும் 16 பேர் கப்பலுக்குள் சிக்கி உள்ளனர். அனைவரையும் மீட்க கடற்படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. கொச்சி துறைமுகத்தில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கண்டெய்னர் கப்பல் கடலில் மூழ்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கி கண்டெய்னர்களை ஏற்றி வந்த கப்பல் கடலில் மூழ்கியது appeared first on Dinakaran.