புதுச்சேரியில் சூதாட்ட சுற்றுலா கப்பலுக்கு அனுமதி: முதல்வர், ஆளுநருக்கு அதிமுக கேள்வி

7 hours ago 2

புதுச்சேரி: புதுச்சேரியில் சூதாட்ட சுற்றுலா கப்பலுக்கு அனுமதி அளித்த முதல்வர், ஆளுநருக்கு அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், கட்சி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் சுற்றுலா நிறுவன சொகுசு கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக புதுவைக்கு 4-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை புதுவையில் இறக்கவும், புதிய பயணிகளை ஏற்றி இறக்கவும் மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த திமுக- காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த சுற்றுலா சொகுசு கப்பல் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது என்.ஆர்.காங்கிரஸ, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

Read Entire Article