புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை: டிச.20 முதல் விமானங்களை இயக்கும் இண்டிகோ

6 months ago 20

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. பெங்களூரு, ஹைதராபாத்துக்கு வரும் டிசம்பர் 20-ல் இண்டிகோ நிறுவனம் விமான சேவையை தொடங்குகிறது.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் கடந்த 2013 ஜனவரியில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மீண்டும் விமான நிலையம் செயல்பட துவங்கியது. இந்நிலையில் புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமானங்களை இயக்குவதை கடந்த மார்ச் 30-ம் தேதியுடன் ஸ்பைஸ் ஜெட் நிறுத்தியது.

Read Entire Article