புதுச்சேரி | வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் கோரி ஆளுநரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு

5 months ago 14

புதுச்சேரி: புயல், மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிவாரணத்தை புதுச்சேரி அரசு வழங்காத நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, எல். சம்பத் ஆகியோர் இன்று நண்பகலில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை ராஜ்நிவாசில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 2007–ஆம் ஆண்டு போட்டித்தேர்வு மூலம் தேர்வு பெற்று பணியில் சேர்ந்து இதுநாள் வரை பணியாற்றி வரும் ஊர்க்காவல் படை வீரர்கள் தங்களுக்கு குரூப்–சி அல்லது குரூப்–டி பிரிவில் அரசு பணி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Read Entire Article