புதுச்சேரி: புதுச்சேரி ரெயின்போ நகரில் பாழடைந்த வீட்டில் 3 இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் ரித்திக், தேவா, ஆதி ஆகிய 3 பேர் இன்று அதிகாலை பயன்படுத்தாத பழமையான வீட்டிற்கு அருகே வெட்டு காயங்களுடன் காணப்பட்டனர். இதில் பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரித்திக் , திடீர் நகரைச் சேர்ந்த தேவா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதே பகுதியை சேர்ந்த சத்தியா என்பவருக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இவர்களுக்கும் ரவுடிகளுக்கும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இறந்த ரித்திக்கும் இதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில், அவர்களை வரவழைத்து இந்த கொலை நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த பகுதியில் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுச்சேரி ரெயின்போ நகரில் பாழடைந்த வீட்டில் 3 இளைஞர்கள் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.