புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு பேராசிரியருக்கு செவாலியே விருது வழங்க பிரெஞ்சு மொழி பாராளுமன்ற கூட்டு அவை அறிவித்துள்ளது.
உலகின் பல பகுதிகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. புதுவையில் 35 ஆண்டுகளுக்கும் மேல் பிரெஞ்சு பேராசிரியராக பணியாற்றி வரும் வெங்கடசுப்புராய நாயகருக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் புதுவை காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு நிறுவன பிரெஞ்சு துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.