புதுச்சேரி துணைநிலை ஆளுநர் - முதல்வர் இடையே கருத்து வேறுபாடா? - உள்துறை அமைச்சர் விளக்கம்

4 hours ago 1

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி அரசியல் உள்நோக்கத்தோடு துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் ஏதோ கருத்து மோதல் இருப்பது போன்ற செய்தியை கூறியுள்ளார். இது முழுக்க முழுக்க மறுக்கப்பட வேண்டிய, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதுபோன்ற பொய்களை எப்போதும் புதுச்சேரி மாநில மக்கள் நம்பமாட்டார்கள், என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் தேசியக்கொடி வெற்றி ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (மே 17) நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி இந்திய ராணுவத்தின் பலத்தை உலகத்துக்கு தெரியப்படுத்தினர். அதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் விதமாக இந்தப் பேரணி நடந்தது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு தேசியக்கொடி வெற்றி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பேரணியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, பல்கலைக்கழகம் துணை வேந்தர் பிரகாஷ் பாபு மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு கையில் தேசியக்கொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.

Read Entire Article