புதுச்சேரி: “வருவாயைப் பெருக்கவே புதிய மதுபான கொள்ளை போன்ற முடிவுகளை அரசு எடுக்கிறது” என்று புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுக்குப்பம் அரசு பள்ளியில் குடிநீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். முழுமையான விசாரணைக்கு பிறகு தகுந்த நடவடிக்கையை அரசு நிச்சயம் எடுக்கும். பள்ளி கட்டிடம் கட்ட ஏற்கெனவே சட்டப்பேரவைத் தலைவர் கேட்டிருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பள்ளி கட்டிம் கட்டவும், பழுதானவைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். அப்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் பள்ளி கட்டித்தில் இருந்து குதித்து காயமடைந்தது தேர்வு பயமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் நமச்சிவாயம், “ஒரே நேரத்தில் எல்லா பிள்ளைகளும் 100 மதிப்பெண் எடுக்க முடியுமா? என்றால் முடியாது.